Wednesday, May 30, 2012

Dr.A.P.J.அப்துல் கலாம்

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�

மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

இந்திய பொருளாதாரம்



இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒன்பது சதவீதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. நாம் 10 சதவீதத்தை எட்டி, அதை 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், நாம் வளர்ந்த இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் காண முடியும்.இந்தியாவின் மொத்த உற்பத்தித்திறன் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டி விட்டது. நம் அன்னியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 300 பில்லியன் இலக்கை தாண்டியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் குவிக்கின்றன. இந்தியாவில் வேலைக்கேற்ற தகுதி வாய்ந்த திறமையான மனித வளம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தி, அதே நிலையில் மேம்படுத்தி கொண்டு செல்லக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு எண்ணெய் தூர் வாரும் தனியார் நிறுவனத்தின் பணிகளுக்கு இந்தியாவிலேயே அதற்குரிய மனிதவளம் கிடைக்கவில்லை என்பதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் மனித வளத்தை நாம் பதப்படுத்தி பக்குவப்படுத்தாவிட்டால், இந்தியா தனது முகவரியை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.இந்தியாவினுடைய வேலைவாய்ப்பு திறன் கொண்ட மொத்த மனித வளம் 45 கோடி. அதில் வரன்முறை படுத்தப்பட்ட மனிதவளம் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதம் வரன்முறைபடுத்தப்படாத துறைகளிலிருந்து வருகிறது. இதில், விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள், வீட்டு வேலையாட்கள் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் என்று வளர வேண்டும் என்றால், விவசாயம் ஆண்டுக்கு நான்கு சதவீத வளர்ச்சியையும், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம்.

விவசாயத் துறையில் குறைந்த வருவாயில் ஈடுபட்டுள்ள மனித வளம், மற்ற துறைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் அவர்களுக்கு தேவையான பயிற்சியும், தேவையான திறமையும் இல்லையென்றால், அவர்களால் எந்தத் துறையிலும் நுழைய முடியாது. இங்கு தான் சவால் ஆரம்பிக்கிறது.இதை சரி செய்வதற்கு அரசு, தனியார் துறைகள், தொழில் துறை, கல்வித்துறை, பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

-  அப்துல்கலாம்


இந்தியாவின் அடையாளமான விவசாயம் மறைந்து வருவதால் உணவு பிரச்னை ஏற்படுமா?

விவசாயத்தை பாதுகாக்காவிட்டால் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. விவசாயத்திற்கான திட்டங்களை கொண்டு வந்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். உணவு பொருட்களை பதப்படுத்தும் முறையை கையாள வேண்டும்.

புவி வெப்ப மயமாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சம்பவங்களை தடுக்க வேண்டும். நாம் ஓட்டும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை கூட புவி வெப்பமயமாக காரணமாக உள்ளது. இதற்கு மாற்றாக மரம் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில் பறவை பறப்பதை பார்த்து அதிசயத்தேன். பறவையால் எப்படி பறக்க முடிகிறது என்பதை ஆசிரியரின் உதவியால் அறிந்தேன். அதன்பின், இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தால் விட முயற்சியுடன் படித்து விஞ்ஞானி ஆனேன்.

சந்திரயான் விண்கல ஆய்வு பற்றி...

சந்திரயான் விண்கலம், சந்திரனில் உள்ள நீர் மற்றும் கனிம வளம் பற்றி ஆய்வு செய்கிறது. இந்தியாவில் விவசாயம் செழிக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக்கப்படும்.

சூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம்


மாணவ, மாணவியருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அணுக்களின் பரிமாற்றம் குறித்து "பாஞ்சாலி சபதம்' எனும் நூலில் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்; அவரை ஒரு விஞ்ஞானி எனக் கூறலாம். சூரியன் பூமியை சுற்றி வருவது போல, வாழ்க்கையில் நாம் நிலைத்து நிற்க, விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். கல்லூரி வாழ்க்கை பருவம், ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது நாம் கற்கும் கல்வியே, வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும். ஒருவரது வாழ்க்கையின் 20 வயதுக்குள் பெற்றோர், ஆரம்ப கல்வி கற்றுத் தந்த ஆசிரியர் ஆகியோர், எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நல்லறிவு, நல்நோக்கம், கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடல் மிக முக்கியம். சிந்தனை, நல்லறிவு ஆகியவையே ஒருவரை மகானாக திகழச் செய்யும். நாம் செய்யும் பணியில் ஈடுபாடும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி எளிதாகும். ஒரு செயலை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகளை கடந்து, வெற்றி பெறும் மனப்பக்குவத்தை வளர்க்கவேண்டும். நாம் பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல், நாம் மறைந்த பிறகும் நமது பெயர் நிலைத்திருக்கும் விதத்தில் நமது செயல் இருக்கவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்கு அவை உதவவேண்டும்.

பூமி வெப்பமயமாதல், தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றை நாம் உணர்ந்து, அவற்றை தடுக்கும் வழி முறைகளை ஆராயவேண்டும். மாணவ பருவத்தில், ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது; ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடித்தளம் கல்லூரி வாழ்க்கை. ஒவ்வொரு கல்லூரியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு முழுமையாக உதவவேண்டும். இதன்மூலம் கண்டுபிடிப்புத்திறன் அதிகரிக்கிறது. வேளாண், வேளாண் உற்பத்தி அதிகரிக்கவேண்டும். இன்ஜி., மற்றும் ஐ.டி., தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவேண்டும். இதில், மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது. எதிர்கால தேவையை உணர்ந்து இளைய தலைமுறை செயல்படவேண்டும். வான்வெளி ஆராய்ச்சிதுறையில் வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெறும் வளர்ச்சி ஏற்படும். சூரிய சக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறியவேண்டும். கண்டுபிடிப்புத் திறன் மிக முக்கியம். வரும் 2020ம் ஆண்டுக்குள் சோலார் மற்றும் அணுசக்தி பயன்பாடு மிக அதிகமாகும். இதற்காக "சோலார் பவர் சேட்டிலைட்' அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் எனது பங்கும் உள்ளது. இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். "கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் என்பவர், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் திட்டத்தை கொடுத்தார். ஆறு மாத காலத்தில் ஏழு பேர் கொண்ட குழுவாக நாங்கள் செயல்பட்டு வடிவமைத்தோம். பேராசிரியரிடம் காண்பித்தபோது, அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்து மாற்றி வடிவமைக்குமாறு தெரிவித்தார். மூன்று நாட்களில் அதை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அப்போதுதான் நேரத்தின் அருமை குறித்து உணர்ந்தேன். மேலும், மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் தெரிந்தது. அதுபோல, இளைதலைமுறையினர் நேரம் தவறாமையை கடைபிடிக்கவேண்டும்' என்றார் அப்துல் கலாம்.

தலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..


ஒருநல்ல தலைவனுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து அதைச் செயல்படுத்த வேண்டிய மனோதைரியமும் துணிச்சலும் இருக்க வேண்டும்’என்பது. இதற்கு நான் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் உடனடியாக என் நினைவுக்கு வருவது இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்தான்.

அவர் மட்டும் அன்று ஒன்றுபட்ட இந்தியாவை உரு வாக்க வேண்டும் என்று தீர்மானித்து , அதை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தியிராவிட்டால் இன்று இந்தியா எத்தனையோ குட்டி குட்டி நாடுகளாக, சமஸ்தானங்களாகச் சிதறுண்டு போயிருக்கும். அவரை விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போனார்கள். இந்த டிஸிஷன் மேக்கிங் பண்பு ஒரு தலைவனுக்கு மிகவும் தேவையானது.
“தலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..’ஒரு அமைப்புக்கு லாபம் என்பது குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அது நேர்மையையும் அறத்தையும் விலை கொடுத்து வாங்குவதாக இருக்கக் கூடாது. அதே போல் ஒரு தலைவன் தன் பணிகளில் அறத்தைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும்.

“ஒரு தலைவனின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்..’இது இன்றைய காலகட்டத்துக்கு மிக முக்கியமான ஒன்று. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதை நாம் காண்கிறோம். பொது வாழ்க்கைக்கு மட்டுமின்றி ஒரு அமைப் புக்குத் தலைவனாக இருப்பவனும் தன்னைப் பற்றிய நடவடிக்கைகளை வெளிப் படையாக வைத்திருக்க வேண்டும். அந்தத் தலைவனை உதாரணமாகக் கொண்டு தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வழி காட்டு வது போல் அந்தத் தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்த வெளிப்படையான தன்மைக்கு ஒரு உதாரண புருஷர். அவர் மக்களுக்கு எதையுமே மறைத்ததில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக அறிவித்தார். அவருடைய ஆசிரமத்தில் எப்போதும் பஜன் நடக்கும். அதில் கலந்து கொள்பவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் காணிக்கை அளித்து விட்டுக் கலந்து கொள்ளலாம். அதில் வசூலாகும் தொகை நல்ல விஷயங்களுக்குச் செலவிடப்படும்.

தினமும் அந்த வசூலில் சேரும் ஒரு ரூபாய்கள் மொத்தமாக கணக்கிடப்படும். ஒருநாள் அந்தக் கணக்கில் சிறு தவறு நேர்ந்து விட்டது. சிறு தவறு தான். அதாவது ஒரே ஒரு ரூபாய் கணக்கு இடித்தது. மகாத்மா காந்தி கடுங்கோபம் கொண்டு விட்டார். அந்த ஒரு ரூபாய்க்கு சரியான கணக்கு வரும்வரை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி உண்ணா விரததத்தில் இறங்கி விட்டார். மூன்று நாட்கள் அந்த உண்ணாவிரதம் நீடித்தது. பிறகு அந்த ஒரு ரூபாய்க்கான கணக்கு சரியாகக் காட்டப்பட... உண்ணா விரதம் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாயாக இருந்தாலும் பொது மக்களுக்கு அந்தக் கணக்கு சரியாகத் தெரியவேண் டும் என்பதில் உறுதியாக இருந்தார் அந்த தேசப்பிதா.

வேலை செய்வதிலும் செய்து முடிப்பதில் ஒரு தலைவனுக்கு நம்பகத்தன்மையும் ஒற்றுமையுணர்வும்  வேண்டும்.’நான் இந்தக் கருத்தைப் பல மீட்டிங்குகளில் சொல்வதுண்டு. இதை ஒப்புக் கொள்பவர்கள் கை தூக்குங்கள்’’ என்று சொல்வேன். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் கை உயர்த்துவார்கள். ஆனால் பெரியவர்கள் கை உயர்த்த மாட்டார்கள். சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு மீட்டிங்கில் இதே கேள்வியைக் கேட்டு கையை உயர்த்தச் சொன்னேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் கூட கை தூக்கவில்லை. ஆனால் இந்தத் தகுதியை ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக நான் கருதுகிறேன்.

இந்த எட்டு அடிப்படை தகுதிகளுடன் ஒரு தலைவன் உருவாகும் போது, அது எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் சரி, அந்த தலைவனால் பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த எல்லா அடிப்படைத் தகுதி களையும் ஒரே வார்த்தையில் அடக்குவதைத்தான் நான் “கிரியேட்டிவ் லீடர்ஷிப்’’ என்று குறிப்பிட்டேன்.

இளைஞர்களிடம்தான் இந்த படைப்பாற்றல் மிக்க தலைமை இருக்கப் போகிறது. இது இளைஞர்கள் காலம். முழுமூச்சுடன் அவர்கள் பணியாற்றப் போகும் காலம். இந்த நாட்டில் உள்ள 540 மில்லியன் இளைஞர்களின் பொறுப்பில்தான் தேசத்தின் எதிர்காலமே இருக்கிறது. அவர்கள் சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்ய வேண்டுமே தவிர, தேவையற்ற வேலைகளில் கவனத்தைச் சிதற விடக்கூடாது.

நான் எம்.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மிகப் பெரும் தலைவரைச் சந்தித்தேன். அவர் அப்போது எனக்கு கொடுத்த தங்கமான அறிவுரை. ""இப்போதைக்கு படிப்பில் மட்டுமே உன் கவனம் இருக்க வேண்டும். அரசியல் அது இது என்று கவனத்தைத் திருப்பாதே..உன் படிப்புதான் உன்னையும் இந்த சமூகத்தையும் உயர்த்தும்...''’என்றார்.

அவர்- தந்தை பெரியார்!

நதிகளை இணைக்க முடியும்!

நதிநீர்இணைப்பு’’ பற்றிய பேச்சு நம் நாட்டில் அடிக்கடி எழுகிறது. அது சாத்தியம் என்றும் சாத்தியமில்லை என்றும், நாட்டின் பல பிரச்னை களுக்கு அது தீர்வாக இருக்கும் என்றும் இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது கெடுக்கும் என்றும் இரண்டு விதமான கருத்துகள் அவை. எந்த ஒரு திட்டத்துக்குமே இரண்டு வகையான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.

அதுவும் இந்தியாவைப் போன்ற மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோது வதில் ஆச்சர்யமில்லை. அவற்றையெல்லாம் நமது சுய விமர்சனங்களாகவே எடுத்துக் கொண்டு விவாதம் செய்து பார்த்தால்தான் உண்மை எது என்பது விளங்கும். "நாடு முழுவடும் உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமே இல்லை.. அது ஒரு மிகப்பெரிய சவால்...'’என்கிறார்கள் சிலர்.

நான் சொல்வது, இப்படி சாத்தியமே இல்லை என்று பேசுவதை முதலில் விட்டு விடுவோம் என்பதுதான். நதி நீர் இணைப்பு ஏன் சாத்தியமில்லை? மனிதனால் முடியாதது என்று ஒன்று உண்டா? வரலாற்றில் அவன் புரிந்திருக்கும் சாதனைகள் எல்லாம் ஒன்றா, இரண்டா?

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை பிறந்திருக்காது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியை அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று சந்திரனுக்கு செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.
7 முறை அமெரிக்காவால் சந்திரனை சுற்றி வர இயலவில்லை, சீனாவாலும், ஜப்பானாலும் சந்திரனில் சாதிக்க முடியாததை இந்தியாவின் கன்னி முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். அயர்லாந்தில், சுவிட்ச்சர்லாந்தில், நெதர்லாந்தில் அமெரிக்காவில் (பனாமா கால்வாய்), ஆப்பிரிக் காவில் (நைல் நதிகளை) இணைத்து சாதித்து காட்டியிருக் கிறார்கள். இப்படி பல்வேறு நாடுகளில், அதன் தலைவர்கள், இயற்கையை மாற்றி, நதிகளை இணைத்து நாட்டை வளமாக்கி காட்டி இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன் இந்தியாவிலே அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. உத்திரபிரதேசம், கோவா, ஆந்திரா, கேரளாவிலே நதிகள் இணைக்கப்பட்டி ருக்கிறது. இந்தியாதான் இயற்கை வளத்திலும் சுற்றுப்புற சூழல் வளத்திலும் சிறந்த நாடு. தண்ணீரே இல்லாத பாலைவனத்தை சோலைவனமாக துபாய், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் மாற் றிக்காண்பிக்கவில்லையா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல் வரிகள் முடியும் என்பதைத்தானே உணர்த்துகின்றன?

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிக மாக உள்ளது. இப்பொழுது சில இளைஞர்களையும் அது தொற்றிக்கொண்டு விட்டது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.

எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவம் கொண்டோரின் துணை கொண்டு வெற்றியை காண முடியும். நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.

தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்?

இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.

புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!

படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!

கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.

புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!
இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!

இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான் !

சீனாவில் அதன் நடுப்பகுதியிலிருந்து, திபெத் வரை பனிநிலத்தில் உலகிலேயே உயரமான ரயில் பாதையை அமைத் திருக்கிறார்கள். மலைக்க வைக்கும் உழைப்பு அது. அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தியம் தான்.

ஏற்கனவே, உலக வெப்பமயமாதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால் பருவ மழையே பொய்த்து வருகிறது. 2020-ம் வருட அளவில், நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத் தால், 400 மில்லியன் டன் உணவுப் பொருட் களை நாம் அதிகமாக உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்!

நதிநீர்இணைப்பு சாத்தியமில்லை என்று சில அரசியல் தலைவர்களும் மந்திரி பொறுப்பில்உள்ளவர்களும் பேசுவதை இப்போதும் கேட்கிறோம். நாம் வானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை, வானவில்லையும் நேராக்கச் சொல்லவில்லை. நம்கண்ணெதிரே இருக்கக் கூடிய ஒரு விஷயத்தைச் சரி செய்யுங்கள் என்றுதான்கேட்கிறோம்.

தமிழ்நாடு வாட்டர்வேஸ் பிராஜக்ட் ஒரு மிகப் புதுமையான திட்டம். வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி உபரிநீரைச்சேமிக்கவும் வைக்கக்கூடிய திட்டம். இரண்டு வழிகளில் நீர் செல்லக்கூடியஒன்று. மேட்டூர், சாத்தனூர், பவானி, வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை,சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு இவற்றோடு பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ்,செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற எண்ணற்ற ஏரிகள், குளங்களை இணைக்கக் கூடியஅற்புதமான திட்டம்.
தமிழ்நாட்டில்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயக்கூடிய முக்கியமான நதிகளை ஒருபொதுவான வழியின் மூலம் இணைக்கக் கூடிய அத்தனை வரைத் திட்டங்களும் அதில்இருக்கின்றன. இந்தத் தண்ணீர் வழிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு ஆழமானஆராய்ச்சிக்குப் பிறகு இவை தீட்டப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குப்புரியும்.

இது என்னுடையகனவுத் திட்டம். இந்த தண்ணீர் வழிகளின் வழியே தமிழ்நாட்டின் அத்தனைஆறுகளும் இணைக்கப்பட்டு தமிழகத்தின் எல்லா ஆறுகளும், ஏரிகளும்,குளங்களும், கால்வாய்களும், இணைக்கப்பட்டு எல்லாவற்றிலும் ஆண்டு முழுவதும்கற்கண்டுத் தண்ணீர் தளும்பி நின்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் எப்போதும் தாகம் தீர தண்ணீர் கிடைக்கக் கூடிய அந்தஅற்புதக்காட்சி எப்போதும் என் கனவுகளில் வருவது உண்டு. அந்தக் கனவுமட்டும் நிறைவேறிவிட்டால் தமிழ்நாடே சொர்க்கபுரி ஆகிவிடாதா என்ன?

ஒவ்வொருநதியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பது போல் மேம்போக்காகப் பார்க்கும் போதுநம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் தேர்ந்த வரைபடத் திட்டங்களின் முலம் இவைஎத்தனை அழகாக இணைக்கப்படக்கூடியவை என்கிற உண்மை புரியும்.

இதுஏதோ வரைபடத்தில் மட்டுமே உள்ள, நிதர்சனத்தில் சாத்தியமே இல்லாத பகல்கனவுதிட்டம் அல்ல. ஐந்து கட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய பிராக்டிகலானதிட்டம்.

முதல் கட்டத்தில் வைகையையும் மேட்டூரையும் இணைக்கும் திட்டம். இது 350 கிலோ மீட்டர் நீளமானது.

இரண்டாவது கட்டம் மேட் டூரையும் பாலாறையும் இணைப்பது, இது 270 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை - தாமிரபரணி இணைப்பு அடுத்த கட்டத்தில் உள்ளது.

நான்காவது கட்டத்தில் 130 கிலோமீட்டர் நீள முள்ள தாமிரபரணி - பெருஞ்சாணி இணைப்பு வருகிறது.

ஐந்தாவதுகட்ட மாக இந்த நதிகளை இணைப்பு மூலம் கிடைக் கக்கூடிய உபரி நீரை ஆங்காங் கேஉள்ள குளம், குட்டை, ஏரிகளில் இணைக்கக்கூடிய சப்சிடியரி கால்வாய்திட்டங்கள்.

இப்படி நதிகளைஇணைப்பது மூலம் தண்ணீர் அற்ற நதிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மட்டுமன்றி,இதர தண்ணீர் நிலைகளுக்கு அதன் உபரித்தண்ணீரும் திறந்து விடப்படுவதால்நாடெங்கும் தண்ணீர் திரண்டு நிற்கக்கூடிய அற்புதமான நிலையை நம்மால் காணமுடியும். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டியதைப் போன்ற மலைக்கவைக்கும் திட்டம் அல்ல இது. பத்தே வருடங்களில் செய்து முடிக்கக் கூடியபிராக் டிகலான திட்டம்.
இதனுடைய பலா பலன்களும் திட்டவரைவில் தெளிவாகவே சுட்டிக்காட் டப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது இந்தத் திட்டம்,உபரியாக, 7.5. மில்லியன் ஏக்கர் அளவு விவசாய நிலத்துக்குப் பாசன நீரைஅளிக்கும்.
150 மெகாவாட்மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் அளவைஅதிகரிப்பதின் மூலம் மின்சார உபயோகத்தை 1350 மெகாவாட் அளவு குறைக்கும்.

10மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அருமையான நீர்வழிப்பாதையைஇந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும். தண்ணீர் போக்கு வரத்து, சுற்றுலாபோன்ற வற்றின் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
சாலைப் போக்குவரத் தைக் காட்டிலும் 90 சதவீத எரிபொருள் சேமிப்பு இந்தத் தண்ணீர்வழிப் போக்கு வரத்தின் மூலமாகக் கிடைக் கும்.

ஐம்பது மில்லியன் பொது மற்றும் தொழிற் சாலை சார்ந்த மக்களுக்கு இந்தத் தண்ணீர் மூலம் பயன் கிடைக்கும்.

புதிய மின் உற்பத்திக் கான வழிகள் இந்தப் புதிய தண்ணீர் சாலைகளின் வழியே ஏற்படும்.

சிந்தித்துப்பாருங்கள். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடாதா? அசோகர் சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டார், ஏரி, குளங்களைஏற்படுத்தினார் என்று இன் றைய சரித்திரத்தில் படிக்கி றோமே, அதே போல்நாளைய வரலாற்றில், தமி ழகத்தில் நதிகளை இணைத் தார்கள், அதன் மூலம்தமிழ்நாடு வளம்பெற்றது என்று எழுதப் பட வேண்டாமா? அது நம் கையில்தானேஇருக்கிறது?
நதிநீர் இணைப்பு அது காலத்தின் கட்டாயம்! நனவாகக் கூடிய கனவு!
...... அப்துல் கலாம்

ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

தண்ணீரும், எரிசக்தியும்தான் எதிர்காலத்தில் நாம் சந்திக்க வேண்டிய இருபெரும்சவால்கள் . நதிநீர்இணைப்பு, புதிய தண்ணீர் வழிச் சாலைகள் அமைப்பது இந்த இரண்டு தீர்வுகள்தான் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். அதே போல் கச்சா பெட்ரோல்எண்ணெய்க்கான மாற்று எரிசக்திகளைக் கண்டறிவது எரிசக்திப் பிரச்னையைத்தீர்க்கும். ஆனால் இவற்றை சாதிப்பது சாதாரண விஷயமில்லை.

கடும்உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, புதுமை படைக்கும் எண்ணம், இவற்றோடு கூடியஒருங்கிணைந்த சக்தி அதற்குத் தேவைப்படும். முக்கியமாக இந்த சக்திக்குத்தேவை ஒரு கிரியேட்டிவ்வான தலைமை. கற்பனைத் திறன் மிக்க ஒரு தலைமைஇருந்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும்.

இந்தபடைப்புத் திறன் மிக்க தலைமை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான்மூன்று கனவுகள் நனவான அற்புதத்தில் கண் ணெதிரே கண்டேன். விண்வெளித் திட்டம்,  அக்னி ஏவுகணைத் திட்டம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு நகரத்தின் வசதிகளை அளிக்கும் திட்டம் இந்த மூன்று பிரம்மாண்ட கனவுகள் நனவானதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

ஒரு நல்ல தலைவனுக்கு இருக்க வேண்டிய தலைமைப்பண்புகளை பார்க்கலாம்.

ஒரு தலைவனுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.

தொலைநோக்குப் பார்வை என்பது எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் என்பதை இப்போதே சரியாக கணித்து அதை நிறை வேற்றுவது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் ராக்கெட்தொழில் நுட்பத் துறையின் தந்தையாகப் போற்றப்படும் பேராசிரியர் விக்ரம்சாராபாயைச் சொல்வேன். இந்தத் தொழில்நுட்பம் உலக அளவில் பரவிக் கொண்டிருந்தகால கட்ட மான 1960-களில் இந்தியாவுக்கான அதன் அவசியத்தை உணர்ந்தார் விக்ரம்சாராபாய். இந்திய ராக்கெட் செயற்கைக் கோள் தொழில் நுட்பத் திட்டத்துக் கானதேவையை முன் கூட்டியே உணர்ந்து அரசாங்கத்துக்கு சில திட்டங்களைப்பரிந்துரை செய்தார். ஒரு மாபெரும் படைப்புத் திறன் கொண்ட தலைமைப்பண்புஅவருக்கு இருந்தது என்றால் அதற்குத் தோள் கொடுக்க ஜவஹர்லால் நேரு போன்ற மகத்தான தலைவரும் அப்போது இருந்தார்.
பண்டிதஜவஹர்லால் நேருவும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயும், இந்தியாவின் எதிர்காலப்பாதுகாப்புக்கு ராக்கெட் தொழில் நுட்பம் அவசியம் தேவை என்பதைஉணர்ந்திருந்தார்கள். நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் உள்பட எத்தனையோபிரச்னைகள் இருக்கும் போது இந்த ராக்கெட் ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்றுபலத்த விமர்சனங்கள் எழுந்த காலகட்டத்தில் தங்கள் எண்ணத்தில் உறுதியாகஇருந்தார்கள் இருவரும். அவர்கள் தொடங்கி வைத்த படைப்புத்திறன் மிக்கதிட்டத்தினால்தான் நாம் உலக அரங்கில் செயற்கை கோள் விஞ்ஞானத்தில்பின்னாளில் பிரகாசிக்க முடிந்தது.

இன்றைக்குஉலகமே நம்முடைய செயற்கை கோள் மற்றும் ராக்கெட் துறை முன்னேற்றங்களைக்கண்டு பிரமிப்புடன் வியக்கிறது. நான் சமீபத்தில் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நாசாவில் உள்ள விஞ் ஞானிகள் ""சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை உங்களுடைய சந்திராயன் கண்டுபிடித்திருக் கிறது. பல வருடங்களாகநாங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் எங்களுக்குக் கிடைக்காதவெற்றி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது...''’என்று பாராட்டி னார்கள்.

விக்ரம் சாராபாய் தொலைநோக்குடன் கண்ட கனவுதான் இப்போது நனவாகி இருப்பதாகஎனக்குத் தோன்றியது. இன்று இந்தியா அனுப்பியிருக்கும் ரிமோட் சென்சிங்மற்றும் தகவல் தொடர்பான செயற்கை கோள் டிரான்ஸ்பாண்டர்கள் மொத்தம் 180விண்ணில் வெற்றிகரமாக வலம் வருகின்றன. இந்தியா முழுக்க 30,000கல்விக்கூடங்களும் 375 ஸ்பெஷா லிட்டி மருத்துவமனைகளும் செயற்கை கோள்மூலமாக இணைக்கப்பட்டிருக் கின்றன. இந்த அற்புதங்களுக்கு அடிப்படை, விக்ரம்சாராபாயின் தொலைநோக்குப் பார்வைதான்.
தொலைநோக்குப்பார்வை இருந்தாலும் அதை நிஜமாக்க செயலாற்றும் ஆற்றல் தலைவனுக்குகண்டிப்பாக இருக்க வேண்டும். விஞ்ஞானம் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும்இதைப் போன்ற தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் இருக் கிறார்கள். ஆனால் பலகனவுகள் நனவானது எப்படி? அந்தக் கனவை நனவாக்கும் செயல் வீரர்கள்தலைவர்களாக இருந்ததுதான் அந்த வெற்றிகளுக்குக் காரணம்.
1950-களில்அமெரிக்காவில் இருந்து கோதுமைக் கப்பல் வந்தால்தான் நமக்கு உணவேகிடைக்கும் என்கிற மோசமான நிலை உருவான போதுதான் சி. சுப்ரமணியம் என்கிறஅரசியல் மேதை தொலைநோக்குடன் பசுமைப் புரட்சித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அது அவருடைய தொலைநோக்குப் பார்வை. அதை எப்படிச் செயல்படுத்தவேண்டும் என்பதும் அந்தத் தலைவருக்குத் தெரிந்திருந்தது.

சிவராமன்ஐ.ஏ.எஸ், வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் போன்ற மிகச் சிறந்ததலைவர் கள் அவருக்குக் கரம் கொடுத்தார்கள். அவர்களின் திறமைகளை திரு சி.எஸ். பயன் படுத்திக் கொண்டார். நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கியது. அதேபோல் வர்கீஸ் குரியனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் செய லாற்றும் திறனால்தான் இங்கே பால் உற்பத்தியில் வெண் மைப் புரட்சி ஏற்பட்டது.

ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்: கலாம்

சென்னை: மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.


சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:

சென்னை மருத்துவக் கல்லூரி 175வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அப்படியென்றால் இந்தக் கல்லூரி சூரியனை 175 ஆண்டுகள் சுற்றி வந்துவிட்டது என்று அர்த்தம்.

மாணவர்களுக்கு கற்பனைத் திறன், நேர்மை, பொறுமை, ஈடுபாடு, தைரியம் அனைத்தும் அவசியம். வாழ்க்கையின் இறுதி வரை எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள்.

மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பின்போதே ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். ஏழைகளும், கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் குறைந்த செலவில் நவீன மற்றும் தரமான மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நோயால் வேதனைப்பட்டு வரும் மக்களிடம் சரியான முறையில் நோயைக் கண்டறியுங்கள். அந்த சோதனை, இந்த சோதனை என அவர்களின் வேதனையை அதிகரிக்காதீர்கள்.

ஐ.ஐ.டியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படுவது நல்ல விஷயம் தான். வாழ்க்கை அறிவியலின் தேவைக்கு பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்.

வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கு நீங்கள் தலைவராக இருங்கள். பிரச்சனைகளை உங்களுக்கு தலைவராகாமல் பாரித்துக் கொள்ளுங்கள் என்றார் கலாம்.

2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

சென்னை : ""தங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. கட்டடத்தை திறந்துவைத்து, அப்துல் கலாம் பேசியதாவது: தீவிரவாதம் இன்று நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க, குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது, தீவிரவாத தடுப்பு சட்டங்களை கடுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் சேவை மனப்பான்மை, நேர்மை குணத்துடன் செயல்பட்டால் தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இளைஞர்கள், தங்களின் தனித்திறனை கண்டறிந்து அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்,தொழில் முனைவோர் என பன்முக திறமைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம். நகர்ப்புற கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அம்மக் களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும். இதன் மூலம், கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கலாம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

விழாவில், மாணவியரின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் அளித்த பதில்கள்:

இந்தியாவின் நீர்வள ஆதாரம், எரிபொருள் பயன்பாடு பற்றி?

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சரியாக பராமரிப்பது, கால்வாய்களை முறையாக தூர்வாருவது மற்றும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, சூரிய எரிசக்தி, "பயோ காஸ்' போன்றவற்றின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

விண்வெளி துறையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து?

செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு இந்திய விண்வெளி துறை முன்னேற்றம் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டம் உள்ளது.

இளைஞர்கள் அரசியலில் சாதிக்க முடியுமா?

நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு முதலில், இளைஞர்கள் பொதுவாழ்விற்கு விரும்பி வரவேண்டும். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தான், "பார்லிமென்ட்'டில் அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. பெண் களுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஈடுபாடு குறைவாக தான் உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் பற்றி?

நல்ல திட்டம். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வி கிடைக்கும்.

2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

தற்போது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், 2020ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும். இவ்வாறு அப்துல் கலாம் பதிலளித்தார்.

Thursday, April 26, 2012

உலகைத் தாங்குவது அன்பு

* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி
அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும்
சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது.


* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம்
இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர்
இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை
இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா
வாழ்வு மரணமே.

* அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு
இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய
வேண்டும். தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற
நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட
வேண்டும். அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ,
அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான
மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க
வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக்
கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர்
பெற்றவராவார்.

அமைதி தரும் உண்ணாவிரதம்

* உண்ணாவிரதம் என்பது இன்று நேற்று உண்டான சாதனமன்று.
ஆதிபுருஷன் என கருதப்படும் ஆதாம் காலத்திலிருந்தே
அனுஷ்டிக்கப்பட்டு வருவது. அது தன்னைத் தானே
தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பயன்பட்டிருக்கிறது. நல்ல
லட்சியங்களோ, தீய லட்சியங்களோ அவைகளை அடைவதற்கு
பயன்பட்டிருக்கிறது.

* உண்ணாவிரதம் என்பது அகிம்சை என்னும் ஆயுத சாலையில்
உள்ள ஆயுதங்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும். அதை
வெகு சிலரே உபயோகிக்க முடியும் என்பதால் அதை உபயோகிக்கவே
கூடாது என்று ஆட்சேபிக்க முடியாது.

* உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை உபயோகிப்பதற்குச் சரீரபலம்
மட்டும் போதாது. சத்தியாக்கிரக கடவுளிடத்தில் அசாத்திய
நம்பிக்கை தேவைப்படும்.

* நான் அனுஷ்டித்த உண்ணாவிரதங்களில் எதுவும் பலன்
தராமல் போனதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் உண்ணாவிரதம்
அனுஷ்டித்த காலத்திலெல்லாம் அதிக உன்னதமான அமைதியும்,
அளவற்ற ஆனந்தமுமே அடைந்தேன்.

* அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும்
அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின்
மேற்பார்வையிலும் தான் உபயோகிக்கக் கூடியதாகும்.

* உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன்
உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.

* ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும்
பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.

* உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக்
கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த
நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே
மிச்சமாகும்.

வார்த்தைகளற்ற இருதயம் வேண்டும்

பிரார்த்தனை மனிதனுடைய வாழ்க்கையின் உயிர்நாடியாகும்.
கடவுளை வேண்டிக் கொள்வதே பிரார்த்தனை. அல்லது பரந்த
அர்த்தத்தில் உள்ளுக்குள் இறைவனுடன் தொடர்பு கொள்வதும்
பிரார்த்தனையே. எப்படியிருந்தாலும் பலன் ஒன்றுதான்.
வேண்டிக் கொள்வதாக இருந்தால்கூட, ஆன்மாவைத்
தூய்மைப்படுத்தும் படியும், அதைச் சூழ்ந்துகொண்டுள்ள
அறியாமையையும், இருட்படலங்களையும் போக்கும்படியும்
வேண்டிக் கொள்வதாகவே இருக்க வேண்டும். தன்னிடமுள்ள
தெய்வீகத் தன்மை விழிப்படைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன்,
பிரார்த்தனையின் உதவியை நாடித்தான் தீரவேண்டும். வெறும்
சொற்களின் அலங்காரமோ அல்லது காதுகளுக்குப் பயிற்சி
அளிப்பதோ பிரார்த்தனை அல்ல. அர்த்தமற்ற சூத்திரத்தைத்
திரும்பத் திரும்பக் கூறுவதும் பிரார்த்தனை அல்ல.

ராமநாமத்தை எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பக்
கூறினாலும் அது ஆன்மாவைக் கிளறவில்லையாயின், அது
வீணேயாகும். இருதயமற்ற வார்த்தைகளைக் காட்டிலும்,
வார்த்தைகளற்ற இருதயமே பிரார்த்தனைக்குச் சிறந்தது.
பசியுள்ள மனிதன் நல்ல உணவை மனதார ருசிப்பதுபோல, பசியுள்ள
ஆன்மா மனமார்ந்த பிரார்த்தனையை ருசித்து அனுபவிக்கும்.
பிரார்த்தனையின் மந்திர சக்தியை அனுபவித்தவன்
சேர்ந்தாற்போல் நாட்கணக்கில் உணவின்றி வாழமுடியும். ஆனால்,
பிரார்த்தனையின்றி ஒரு விநாடி கூட வாழமுடியாது. ஏனெனில்
பிரார்த்தனையின்றேல், உள்ளத்தில் அமைதி இருக்க முடியாது.

Friday, March 30, 2012

பெற்றோரை நேசி

பெற்றோரை நேசிப்பவரா நீங்கள்?


பாசம் கொட்டி வளர்த்த பெற்றோரை அவர்களின் முதிர்வயதில் கண்டு கொள்ளாமல் போகும் பிள்ளைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். `சேச்சே… நானெல்லாம் அப்படி இல்லை. என் பெற்றோர் தான் என் உயிர்’ என்று உங்களில் பலர் சொல்லக்கூடும்.

... அப்படியானால் நீங்கள் பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.

பணி ஓய்வு, நோய் அவர்களில் ஒருவர் மரணம் போன்ற பிரச்சினையான கால கட்டங்களில் நான் என் பெற்றோருக்குத் துணையாக நிற்பேன்.

என் பெற்றோர் இளவயது வரையிலும் வேண்டியமட்டும் என்னை கவனித்தார்கள். இப்போது இது என் முறை. நான்தான் அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களின் தேவையறிந்து நான் செயல்படுவேன்.

அவர்கள் இதுவரை செய்த எல்லாவற்றிற்காகவும் நான் நன்றியுடன் இருப்பேன்.

அவர்களோடு நான் அதிக நேரம் செலவிடுவேன். அவர்களுக்கு நான் தரும் உணவில் என் அன்பும் கலந்திருக்கும்.

என் மழலைப்பருவம், குழந்தைப்பருவம், இளம் பருவங்களில் பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் என்னைப் படிப்படியாக அழைத்துச் சென்றதை நினைவில் வைத்து, அவர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று வருவேன்.

மேற்சொன்ன அத்தனையையும் இதய சுத்தியோடு நீங்கள் சொல்லியிருந்தால் பெற்றோரின் தங்கமான பிள்ளை நீங்கள் தான்.

சிலர் தங்கள் பெற்றோரை பூவாகத் தாங்குகிறோம் என்பார்கள். அவர்கள் சொன்னதை நம்பி வீட்டில்போய் பார்த்தால் பெற்றோர் வீட்டின் உள் இருட்டறையில் அழுக்குக் கட்டிலில் கிழிந்த நாராய் கிடப்பார்கள்.

இதுவா கவனிக்கிற லட்சணம்? நேசிக்கிற லட்சணம்?

பெற்றோரை முதிர்வயதில் தள்ளி விடாதே என்கிறது, பைபிள்.

நிஜமாகவே பெற்றோரை நேசிப்பவர்கள்பின்வரும் 6 கேள்விகளுக்கு ஆம்- இல்லை பதிலளிக்கலாம்.

1. வயதான பெற்றோர் ஆலோசனைகளும் அறிவுரைகளும் எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது? (ஆம் / இல்லை)

2. வயதாகி விட்டதால் பெற்றோர் எரிச்சலூட்டு பவராகவும் மனச்சோர்வு அடைபவராகவும் உள்ளனர். இப்படிப்பட்ட நடத்தையை நான் புரிந்துகொண்டு அவர்களை அனுசரித்துப் பாகிறேன்.. (ஆம் / இல்லை)

3. நான் வளரும்போது எனக்கான தேவைகளை என் பெற்றார் தீர்மானிக்கிறார்கள். நான் வளர்ந்த பிறகு எனது விருப்பங்களை நானே முடிவு செய்கிறேன். சில சமயங்களில் மட்டும் அவர்களிடம் ஆலோசிக்கிறேன். (ஆம் / இல்லை)

4. எனக்கு வேலைகள் அதிகமாக இருந்தாலும், என் பெற்றோருக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுடைய எல்லா தேவைகளையும் கவனித்துக் கொள்கிறேன். (ஆம் / இல்லை)

5. எனக்கு மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் பெற்றோரிடம் ஆலோசனை பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். (ஆம் / இல்லை)

6. என் பெற்றோரை நான் நேசிக்கிறேன் என்பதை அவர்களிடம் வெளிப்படுத்துகிறேனா? (ஆம் / இல்லை)

7. என் வாழ்க்கைத் துணையை தேட என் பெற்றோர் உதவுவதாகக் கூறினால், நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறி விடுவேன். (ஆம் / இல்லை)

8. என்னைப் போலவே என் லைப் பார்ட்னரும் என் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்வேன். (ஆம் / இல்லை)

9. பெற்றோருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எரிச்சலாவேன். (ஆம் / இல்லை)

10. குழந்தைகளை வளர்ப்பது விஷயமாய் என் பெற்றோரின் ஆலோசனையையும் கேட்கிறேன். (ஆம் / இல்லை)

இப்போது நீங்கள்விடை சொல்லும் நேரம். விடை எழுதும்போதே நான் என் பெற்றோருக்கு எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். குறைகள் உங்கள் பக்கம் இருந்தால் இப்போதே அதை மாற்றிக்கொண்டு பெற்றோருக்கு அன்பான பிள்ளைகளாக இருக்க தீர்மானியுங்கள்.
 இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது

தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும்.

அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்
சொல்லுங்கள்.

‘நான்’ என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும்

பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத்
தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும்.
அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து
கொள்ளும் வரை ‘நான்’ என்ற மயக்கம் இருக்கும்.

வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள்
அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது.
காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு
காரணத்தோடுதான் வருகிறது.

கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய்
உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே
உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு
சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை
நீங்கள் காணமுடியும்.

நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர்
கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம்
அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான்
தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன்
மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம்
ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே
ஒதுக்கிவிட வேண்டும்.
ஆனந்தம் என்பது எது தெரியுமா

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்

வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை
அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
நெறிமுறையாகும்.
* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
முடியாமல் தவிப்பார்கள்.
* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
மாட்டீர்கள்.
* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
ஆரம்பித்து விடுவீர்கள்.
* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
முடியாது.

குட்டி பாலாஜி: மனை அமைக்கும் விதம்

குட்டி பாலாஜி: மனை அமைக்கும் விதம்

வாழ்க்கையில் வெல்ல `6′ வழிகள்

தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பி பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே…
 
 நம்பிக்கை:
                   நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகு படுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.
நேர்த்தியான உடை:
                      `நான் கலராக இல்லை. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது` என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடை தான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கனிவான பழக்கம்:
                          வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடை போடலாம்.

நட்பை தேர்வு செய்யுங்கள்:
                              வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும் தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:
                           நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.

விலக்க வேண்டியவை:
                            வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறும் இருந்தால் வெற்றி உங்களைச் சேரும், மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

Saturday, March 10, 2012

குண்டர்கள் என்பவர்கள் யார்?




உலகில் குண்டர்கள் என்போர் யார் என்பதை அருணகிரி நாதர் தமது தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள் என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் கூறியிருக்கிறார். அவருடைய வாக்கின்படி இடம் பெற்றிருக்கும் குண்டர்கள்.


... 1. நண்பனாக இருந்து கொண்டு துன்பம் செய்கிறவர்கள்.
2. செய் நன்றியை மறந்தவர்கள்
3. விரதங்களை விலக்கியவர்கள்
4. தானம் செய்வதை தடுப்பவர்கள்
5. சொன்ன வாக்கை காப்பாற்றாதவர்கள்
6. சோம் பேறிகளாக இருந்து கொண்டு சொல்லை வீசுகிறவர்கள்.
7. இறைவனுக்கு உரிமையான சொத்துக்களை சூறையாடுபவர்கள்
 
விரத உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பது ஏன்?

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். விரதமிருப்பவர்,அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். சாப்பிட்டால் மலஜலம் கழிக்க நேரிடுமே என்பதால் தண்ணீர் கூட குடிக்காமல் பசித்திருந்து, சிந்தனை மாறாமல் இருப்பதையே உபவாசம் என்ற நிலையில் முதன்மையாகக் கூறியுள்ளனர். உபவாசம் என்றால் இறைவனுக்கு அருகில் இருத்தல் என்று பொருள். முறையாக இருக்க இயலாதவர்கள் கூட அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்ற ன
யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
... 4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
 
உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி

மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் "நமசிவாய' மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலில...ுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளின் அடிப்படையில் 64 சாத்துமரங்கள் இருக்கின்றன, 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சனி பகவான்

பெயர் - சனி பகவான், சனீஸ்வரன், முடவன், மந்தன்
தந்தை - சூரிய பகவான்
தாயார் - உஷா, சாயாதேவி
... மனைவிகள் - நீலாதேவி,
சேஸ்டா தேவி புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் - புதன், சுக்கிரன்
சின்னம் - தராசு
மொழி - அந்நிய பாஷை
ஆசனம் - வில்வ வடிவம்
பாலினம் - அலி
சாஸ்திர பெயர் - மேற்கோள்
கோத்திரம் - காசியபர்
வடிவம் - குள்ளம்
நாடி - வாத நாடி
உடல்உறுப்பு - நரம்பு (தொடை)
உணவு - எள்ளு சாதம்
உடமை - ஆயுளுக்கு முழுப் பொறுப்பு
ரத்தினம் - கருநீலம், நீலம் பஞ்சபூதத்
தன்மை - ஆகாயம்
குணம் - குரூரர்
நன்மை அடையும் இடம் - 3, 6, 11 தசை
வருடம் - 19 வருடம் பலன் கொடுக்கும்
பார்வை - 3, 7, 10
ராசி சஞ்சாரம் - 2 வருடம்
பிணி - வாதம், நரம்பு நோய்
பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்
கிழமை - சனிக்கிழமை
பூஜிக்கும் தேவதை - துர்க்கா, சாஸ்த்தா
பெற்ற பட்டம் - ஈஸ்வர பட்டம்
பரிகார தலங்கள் - 1. திருநள்ளாறு, 2. குச்சனூர், 3. திருக்கொள்ளிக்காடு
திசை - மேற்கு
அதிதேவதை - எமன்
தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
இனம் - சூத்திரர்
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை மற்றும் வன்னி
ஆடை - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலமணி
சுவை - கசப்பு
சமித்து - வன்னி
உலோகம் - இரும்பு
பயன் - நோய்,
வறுமை, சிரமங்கள், நீங்குதல்
தீபம் - எள்ளு தீபம் ஆட்சி
வீடு - மகரம், கும்பம்
உச்ச வீடு - துலாம்
நீச்ச வீடு - மேஷம்
நட்பு வீடு - ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
சம வீடு - விருச்சிகம்
பகை வீடுகள் - கடகம், சிம்மம்
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை
 
சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க...

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
...
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

* கோமாதா பூஜை செய்யலாம்.

* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு

* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.

* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.

* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.

* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.

* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.

* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள இடைகாலத்தில் வீடுகட்டுதல் கூடாது.

* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.

* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.

* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.

* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.

* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.

* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.

சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார்.